search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இன்று மின்தடை- எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ?
    X

    சென்னையில் இன்று மின்தடை- எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ?

    • மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும்.
    • பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு.

    தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாகமின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.

    மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும் என்பதால், சிரமங்களை குறைக்க பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் இன்று முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அண்ணாசாலையில் உள்ள ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலையின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யூ, ரஹேஜா டவர், ஜிபி சாலை ஒரு பகுதி, சத்திய மூர்த்தி பவன், இபி காம்ப்ளக்ஸ், ஈபி லிங்க் சாலை, கிளப் ஹவுஸ் சாலை, சிட்டி டவர், பட்டுலால்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி , எக்ஸ்பிரஸ் அவென்யூ, கலைக் கல்லூரி, பின்னி சாலை, விசி சாலை, ஹோட்டல் காஞ்சி, டிஎல்எஃப் இன் ஒரு பகுதி, இந்தியன் வங்கி, ஃபகான் கட்டிடம், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், மதுரா வங்கி, ஐஓபி வங்கி, பின்னி சாலை, ராணி மெய்யம்மாள் விடுதி மற்றும் திருமண மண்டபம் , ஏர் இந்தியா, அப்பல்லோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டித் சாலை, கனரா வங்கி, கன்னர்மாரா ஹோட்டல், ஐஓபி வங்கி, டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல், அண்ணாசாலை பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி பகுதியில், சிப்காட் I, II மற்றும் IV, பஞ்செட்டி, ஓபிஜி, பிர்லா கார்பன் மற்றும் துல்சியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிப்காட் தொழில்துறை வளாகம், சிப்காட் பைபாஸ் சாலை, புதிய GPD, கங்கன் தொட்டி, பாப்பான் குப்பம், சிந்தலக்குப்பம், சித்தராஜ கண்டிகை, பெத்திகுப்பம், எலாவூர், பெரியகுப்பம் ஓபுலாபுரம், சுன்னம்புகுளம், எட்டூர், கொண்டமநல்லூர், நாயுடுகுப்பம், ஆரம்பாக்கம், எழுமதுரை, கும்மிடிப்பூண்டி பஜார், புதிய ஜிபிடி, வேர்காடு, ஏனாதிமேல்பாக்கம், பெத்திக்குப்பம், மா.பொ.சி. நகர், ஆத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டம்பேடு, குருவியாகரம், நத்தம், டவுன் கும்மிடிப்பூண்டி, ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி., நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், பாலவாக்கம், பாலவாக்கம், சோலியம்பாக்கம். , மங்காவரம் மற்றும் குரு வியாகரம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×