search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்
    X

    சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டமசோதா தாக்கல்

    • தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது.
    • மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்.

    சென்னை:

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தண்டனைகள் கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

    கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

    மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்.

    தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை அந்த பகுதியில் இருந்தே நீக்கம் செய்ய மதுவிலக்கு, புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

    தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து, அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×