search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் நாற்று நட்டு விவசாயிகள் வழிபாடு
    X

    காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் நாற்று நட்டு விவசாயிகள் வழிபாடு

    • ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    திருவையாறு:

    காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விடபடவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்யமண்டப படித்துறை அருகே காவிரி தாய்க்கு விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தஞ்சை நெற்களஞ்சிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நடுவ நிறுவனா் அரு.சீா். தங்கராசு தலைமை வகித்தாா்.

    இதில், காவிரி ஆற்றில் காவிரித்தாய் என்ற எழுத்து வடிவில் மாப்பிள்ளை சம்பா நாற்று நட்டு வைக்கப்பட்டது. மேலும், காவிரித்தாய் படத்துக்கு பூஜைகள், தீபாராதனைகள் செய்து, காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×