search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பலாத்காரமா, பலத்த காரமா..? எடிட் செய்தும் குழம்பிய செல்லூர் ராஜூ
    X

    பலாத்காரமா, பலத்த காரமா..? எடிட் செய்தும் குழம்பிய செல்லூர் ராஜூ

    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • பலாத்காரம் என்பதற்கு பதிலாக அவர் பலத்த காரம் என பதிவிட்டது சர்ச்சையாகி உள்ளது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் எக்ஸ் தள பதிவால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. "டம்மி முதல்வரின் ஆட்சியில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்" தொடர்பாக செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவில் அவர், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பலத்த காரம், கற்பழிப்பு" என குறிப்பிட்டுள்ளார். இதில் பலாத்காரம் என்பதற்கு பதிலாக அவர் பலத்த காரம் என பதிவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.


    முன்னதாக இவர் வைகை அணையை மூடுவதற்கு தெர்மாகோல் பயன்படுத்திய சம்பவம் அரசியலில் பேசுபொருளான நிலையில், தற்போது எக்ஸ் தள பதிவில் எழுத்துப்பிழை ஏற்பட்டதை பலரும் சமூக வலைதளங்களில் நக்கலாக பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×