என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.56 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்13 Aug 2024 3:56 PM IST (Updated: 13 Aug 2024 4:07 PM IST)
- கார் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இரண்டு பேரை கைது செய்ததுடன் 6.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 6.60 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்த தீவிர சோதனையில் சந்தேக விதமாக வந்த காரை நிறுத்தியதில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ 600 கிராம் மதிப்பிலான கடத்தல் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர். அதன் மதிப்பு ரூ.4.56 கோடி ரூபாய். உடனே தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X