search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டில் வென்ற மாணவியின் காளை
    X

    மாணவி யோக தர்ஷினி

    ஜல்லிக்கட்டில் வென்ற மாணவியின் காளை

    • கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது.
    • மனம் தளராக மாணவி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்று உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவி தனது வீட்டில் வடமுகத்து கருப்பு, வீரா, பாண்டி மணி ஆகிய 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

    கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி குழுவினர் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்க முன் வந்தனர். ஆனால் தனது மாடு பிடிமாடாகியதால், அந்த பரிசு வாங்க மாணவி யோக தர்ஷினி மறுத்துவிட்டார்.

    அதன் பிறகு இந்த ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, அதனை தயார்படுத்தி வந்தார். அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தனது காளைகளை பதிவு செய்திருந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இவரது காளை பிடிமாடாகியது. அதில் மனம் தளராக மாணவி யோக தர்ஷினி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதற்காக யோக தர்சினிக்கு 2 தங்க காசுகள், ஒரு சைக்கிள் பரிசாக கிடைத்தது. அந்த பரிசை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் நேரடியாக மாணவிக்கு வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×