என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சீர்காழி கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
- கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
- பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சீர்காழி:
நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார்.
நவகிரக கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கேது பகவான் ஸ்தலத்தில் வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்