search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இந்தியா முழுவதும் கைவரிசை... ஏ.டி.எம். கொள்ளையில் 70 பேர் கொண்ட கும்பல் கொள்ளை
    X

    இந்தியா முழுவதும் கைவரிசை... ஏ.டி.எம். கொள்ளையில் 70 பேர் கொண்ட கும்பல் கொள்ளை

    • கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
    • கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளை கும்பல் இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்டெய்னர் லாரிகளில் சென்று கூகுள் மேப் மூலம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.களை கண்காணித்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    நாமக்கல்லில் பிடிப்பட்ட 5 பேரிடமும் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் கடந்த 2021-ம் ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது இவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அப்போது அவர்களின் பெயர், முகவரிகளை மாற்றி தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் புகைப்படம், கைரேகை பதிவாகி உள்ளது.

    இவர்கள் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்களை தேர்வு செய்து பல்வேறு குழுக்களாக பிரிந்து நாடு முழுவதும் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை யாரிடம் கொடுக்கிறார்கள். சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலில் 70 பேர் கொண்ட கும்பல் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலுக்கு அரியானாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×