search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 7 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்
    X

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- 7 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்

    • அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
    • காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி முதல் களமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உடற்தகுதி பெறாத 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 26 காளைகளும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×