search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.05 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,428 கனஅடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 24 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடி யாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.56 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×