search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி: தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்
    X

    துப்பாக்கி சூட்டில் மீனவர் பலி: தமிழகம்-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

    • தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா பலியானார். அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    Next Story
    ×