search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெற்றோர் இல்லாத பெண்ணுக்கு ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...
    X

    பெற்றோர் இல்லாத பெண்ணுக்கு ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...

    • பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.
    • இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரும் இவரது மனைவியும் கொரோனாவில் இறந்து போயினர். இதனை தொடர்ந்து இவர்களது ஒரே மகள் சங்கீதா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.

    பெற்றோரை இழந்த சங்கீதாவிற்கு திருமண வயது வந்தது. பெற்றோர் இல்லாத சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். தொடர்ந்து கோட்டேரியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.

    தொடர்ந்து இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார். இந்த நிலையில் சங்கீதா கருவுற்றார். இத்தகவல் காட்டுக்கூடலூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் வீட்டின் சார்பில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி, 5 விதமான சாத வகைகள், பலகாரம், பால், பழங்கள் போன்ற சீர் வரிசை பொருட்களுடன் சென்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு தாய் வீட்டின் சார்பில் ஊர்மக்கள் வளைகாப்பு நடத்தினர். பெற்றோர் இல்லாத இளம்பெண்ணுக்கு ஊர்மக்கள் கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் பண்ருட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×