search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாம் தமிழர் கட்சியில் விரிசல் - மாவட்ட பொறுப்பாளர் பகிரங்க பேட்டி
    X

    நாம் தமிழர் கட்சியில் விரிசல் - மாவட்ட பொறுப்பாளர் பகிரங்க பேட்டி

    • கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை.
    • எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம்.

    கிருஷ்ணகிரி:

    நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் கரு.பிரபாகரன் இன்று அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வளவோ நடக்குது வலி தாங்க முடியல. கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை

    ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் எளிமையான கட்சின்னு சொல்றீங்க... உங்களுடைய வீட்டில் 5 கார், 3 பேருக்கு 15 வேலை ஆட்கள், மாதம் 2.5 லட்சம் வாடகை என சொகுசாக வாழ்கிறார்கள்.

    எங்கள் வாழ்க்கையில் 14 வருடத்தை வீணடித்துவிட்டோம். இனி யாரும் உங்கள் இளமையை அழித்து விடாதீர்கள்.

    கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்று கூறினர்.

    Next Story
    ×