search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை வந்தார் மாயாவதி... பெரம்பூர் நோக்கி பயணம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை வந்தார் மாயாவதி... பெரம்பூர் நோக்கி பயணம்

    • உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மாயாவதி.
    • மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருவதாக நேற்று தெரிவித்தார்.

    அதன்படி, இன்று காலை உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மாயாவதி, சாலை மார்க்கமாக பெரம்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.

    மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





    Next Story
    ×