search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கு பா.ஜ.க, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

    90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் இக்கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள். வெற்றியை காட்டிலும் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிற்கும் முக்கியமானது. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு-காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது. இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×