search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
    X

    பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

    • ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • மாயாவதி இன்று காலை உத்தரபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது.

    இதன்பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி இன்று காலை 9.30 மணியளவில் உத்தரபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    இதனிடையே, கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை இன்று காலை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.

    Next Story
    ×