search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நெல்லையில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்- 8 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நெல்லையில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்- 8 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

    • கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டம் வாரியாக பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தேர்தல் நெருங்குவதையொட்டி தென்மாவட்டங்களில் இந்த வாரத்தில் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கட்சிகளின் நிர்வாகிகள் உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களின் இந்த படையெடுப்பால் தென்மாவட்டங்களில் தேர்தல் களம் அனல்பறந்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தென் மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பிற்பகலில் நெல்லை வரும் ராகுல் காந்தி பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து திறந்த வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி ரோடு-ஷோ செல்கிறார். அப்போது அவரை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அவர் செல்லும் வழியில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் அவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் ஹெலிபேடு தளம், அவர் செல்லும் திருச்செந்தூர் சாலை மற்றும் பிரசாரம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×