search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ரூட் தல விவகாரம்... படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு
    X

    ரூட் தல விவகாரம்... படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு

    • பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து மற்றும் ரெயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சில நாட்களுக்கு முன்னர் ரூட் தல தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    Next Story
    ×