என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தமிழிசையை பா.ஜ.க. கைவிட்டு விட்டது- செல்வப்பெருந்தகை
- நீட் தேர்வில் யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆக கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தான் முடிவு செய்கிறார்கள்.
- இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்றார்கள்.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்கட்சித் தலைவராக கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமனை அகற்ற வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4-ந்தேதி, நீட் தேர்வு முடிவை வெளியிட்டார்கள். நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு வர்த்தக சூதாட்டம்.
நீட் தேர்வை உடனடியாக நீக்க வேண்டும். நீட் தேர்வில் யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆக கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தான் முடிவு செய்கிறார்கள்.
இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்றார்கள்.
நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 1,500 பேர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள்.
அவர்களுக்கு ஒரு நீதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதி. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய
தமிழிசை சவுந்தர ராஜனை பா.ஜ.க. கைவிட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு மற்றும் டி.என்.அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்