search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்
    X

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்

    • சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்.
    • திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.

    சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×