search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குளுகுளு சீசன் நிலவுகிறது: குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    குளுகுளு சீசன் நிலவுகிறது: குற்றாலம் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

    • பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும்.
    • இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வரும் குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள்.

    தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும். அதன்படி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    இருப்பினும் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று காலை முதல் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் சீசனை அனுபவிக்க வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது.

    Next Story
    ×