search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தி.மு.க. ஓயாது- உதயநிதி ஸ்டாலின்
    X

    நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தி.மு.க. ஓயாது- உதயநிதி ஸ்டாலின்

    • தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
    • நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்.

    சென்னை :

    நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

    மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

    * நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

    * அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.


    * சமூகநீதிக்கு எதிரானவை.

    * தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

    நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலினின் பதிவை ரீ-டுவிட் செய்து கூறியிருப்பதாவது:-

    சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×