search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்துவின் யோசனை
    X

    வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்துவின் யோசனை

    • பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு.
    • துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை;

    சென்னை :

    கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    துபாயில் இருக்கிறேன்

    எனக்குப் பின்னால்

    மலைபோல் தெரிவது

    மலையல்ல

    பதப்படுத்தப்பட்ட

    துபாயின் கழிவுகளை

    ஊருக்கு வெளியே கொட்டி

    மண்ணிட்டு மூடிய

    குப்பைமேடு

    இதில்

    துர்நாற்றம் இல்லை;

    சுகாதாரக் கேடு இல்லை;

    சுற்றுச்சூழல் மாசு இல்லை;

    நாளை மக்கிய பிறகு

    தாவர எருவாகும்

    சாத்தியங்கள் உண்டு

    வெளிநாடு செல்லும்

    அமைச்சர்களும்

    அதிகாரிகளும்

    இதுபோன்ற உருப்படியான

    திட்டங்கள் கண்டு

    உள்நாட்டில்

    செயல்படுத்துங்களப்பா

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.


    Next Story
    ×