search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தொடர் மழையால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
    X

    தொடர் மழையால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

    • கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது.
    • சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

    கடந்தாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கோடை தொடங்கும் முன்பே, பிப்ரவரி மாதத்தில் வீராணம் வறண்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பவது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, மேட்டூரில், குறைந்த அளவு நீர் இருப்பு இருந்த நிலையிலும், கல்லணைக்கு தண்ணீர் பெறப்பட்டது. அங்கிருந்து கொள்ளிடம், கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 26-ந்தேதி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, கடந்த 29-ந்தேதி காலை முதல் வினாடிக்கு 18 கன அடி குடிநீர் சென்னைக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் தொடர்மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது ஏரியின் கொள்ளளவான மொத்த 1,465 மில்லியன் கன அடியில், 640 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து, சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 54 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×