search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விராலிமலை அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு
    X

    விராலிமலை அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு

    • படுகாயம் அடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வெல்டிங் வைக்கும் போது ஏற்பட்ட மின் கசிவால் பட்டாசு குடோனில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த பட்டாசு ஆலை உரிமையாளரின் தம்பி கார்த்திக் என்பவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×