search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலைக்கு ஏன் இந்த வேலை?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அண்ணாமலைக்கு ஏன் இந்த வேலை?

    • வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அண்ணாமலை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருக்கிறார்.
    • ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    அ.தி.மு.க.வுடன் மோதுவதே அண்ணாமலைக்கு வேலையாகி போய்விட்டது என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. சார்பில் எத்தகைய அறிவிப்பு வெளியிட்டாலும் அதற்கு பதிலடி கொடுப்பது போல அதற்கு முன்பே அதை செய்து முடித்துவிடுவது என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். இதனால் பலதடவை அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடம் அண்ணாமலை பேசிய பிறகு இந்த மாதிரி சர்ச்சை ஓய்ந்துவிடும் என்றே பலரும் எதிர் பார்த்தனர். ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அண்ணாமலை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருக்கிறார்.

    கவர்னரை சந்தித்து திங்கட்கிழமை மனு கொடுக்க போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னதும் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமையே கவர்னரை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார். அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று அ.தி.மு.க. தலைவர்கள் சற்று ஆதங்கமும், எரிச்சலும் அடைந்துள்ளனர். ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதில் அ.தி.மு.க.வை மட்டம் தட்டும் வகையில் நடந்துகொள்வதை தான் ஏற்க இயலவில்லை என்று அ.தி.மு.க.வினர் கொந்தளிக்கிறார்கள்.

    அப்படி கொந்தளிப்பு ஏற்படுவதை விட அ.தி.மு.க.வுடன் இணைந்து கவர்னரை சந்திக்க சென்றால் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இனியாவது அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட அண்ணாமலை முன்வரு வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×