search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குடிபோதையில் தகராறு- பேண்ட் வாத்திய கலைஞர் கொலை
    X

    குடிபோதையில் தகராறு- பேண்ட் வாத்திய கலைஞர் கொலை

    • பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 60-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது60) பேண்ட் வாத்திய கலைஞரான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    ஆபிரகாமுக்கும், அவரது வீட்டுக்கு எதிரே தனியாக வசித்து வரும் முகமது ஜின்னா (55) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு குடிபோதையில் இருந்த ஆபிரகாம் அவதூறாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    இதனால் அவருக்கும் முகமது ஜின்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமதுஜின்னா வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து ஆபிரகாம் தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர போலீஸ் ஏ.எஸ்.பி. மதன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதுடன் முகமது ஜின்னாவை கைது செய்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆபிரகாம் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×