என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒட்டன்சத்திரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
- கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
- விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது59), சேகர் (35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழிலாளி. அவரது நண்பர் துரையன் (21). பெயிண்டர். 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்