search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதில்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதில்

    • இன்று இதுவரை லேசான மழைதான் பெய்து உள்ளது.
    • அதி கனமழை பெய்தாலும், அதையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிற்றுண்டி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கினார்.

    சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவருடன் தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டல குழுத் தலைவர் மதன் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு மழையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக அனைத்துவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

    இன்று இதுவரை லேசான மழைதான் பெய்து உள்ளது. இதற்கு பிறகு அதி கனமழை பெய்தாலும், அதையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஒத்துழைப்பு தந்ததற்கு. களத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மையாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மழை நீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு உள்ளார். சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×