search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2-வது நாளாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
    X

    2-வது நாளாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    • கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடலுக்குச் சென்று அதிக மீன்களை பிடித்து வரலாம் என்று நினைத்த மீனவர்களுக்கு, கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    சுறைகாற்றின் வேகத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் 2-வது நாளாக முடங்கிப் போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய பைபர் படகுகளும் கடற்கரையில் ஓய்வெடுக்கின்றன. காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×