search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
    X

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

    • அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.க.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கிய நிலையில் வரும் 21-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×