search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்- ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்- ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்

    • குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    இந்தநிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிர்வாகக் காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக 26.8.23 அன்று (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×