search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது

    • மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×