search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
    X

    வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    • இந்தாண்டு இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக வீசியது.
    • வெப்ப அலையால் இந்தியாவில் பலர் உயிரிழந்தனர்.

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தாண்டு இந்தியாவில் கடுமையான வெப்ப அலை தீவிரமாக வீசியது. இதனால் கோடைக்காலத்தில் இந்தியா எங்கும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானது. வெப்ப அலையால் பலர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இனிமேல் வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், "வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×