search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்

    • தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றுகாலை தொடங்கவுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி, சென்ட்ரல்-செங்கோட்டை, சென்ட்ரல்-மங்களூரு, தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06001), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002), மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்.

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை சிறப்பு ரெயில் (06005), மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 31 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06006), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    * சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவம்பர் 2-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் கர்நாடக மாநிலம் மங்களூரு சிறப்பு ரெயில் (06037), மறுநாள் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    * தாம்பரத்தில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (060499), அதேநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில் (060509, மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வரும் நவம்பர் 4-ந் தேதி மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரெயில் (06039), மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து வரும் நவம்பர் 5-ந் தேதி மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரெயில் (06040), மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (23-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×