என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
த.வெ.க. மாநாடு: ரெயிலில் இருந்து குதித்த இளைஞர் பலி? ரெயில்வே அதிகாரியின் உண்மை தகவல்
- ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
- இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையின் பின்புறம் ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
இளைஞர்கள், தவெக மாநாட்டு பந்தலை பார்த்த உற்சாகத்தில் கீழே குதித்தாக தகவல் வெளியானது. மேலும், இவர்களில் மாநாட்டுக்காக சென்ற நிதிஷ்குமார் என்பவர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் அவர் உயிரிழக்கவில்லை, தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்