search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    த.வெ.க. மாநாடு: ரெயிலில் இருந்து குதித்த இளைஞர் பலி? ரெயில்வே அதிகாரியின் உண்மை தகவல்
    X

    த.வெ.க. மாநாடு: ரெயிலில் இருந்து குதித்த இளைஞர் பலி? ரெயில்வே அதிகாரியின் உண்மை தகவல்

    • ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.
    • இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், த.வெ.க மாநாட்டு மேடையின் பின்புறம் ரெயில் வழித்தடத்தில், ரெயில் மெதுவாக சென்றபோது இளைஞர்கள் கீழே குதித்துள்ளனர்.

    இளைஞர்கள், தவெக மாநாட்டு பந்தலை பார்த்த உற்சாகத்தில் கீழே குதித்தாக தகவல் வெளியானது. மேலும், இவர்களில் மாநாட்டுக்காக சென்ற நிதிஷ்குமார் என்பவர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால், புதுக்கோட்டையை சேர்ந்த நித்திஷ் என்பவர் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்றும் அவர் உயிரிழக்கவில்லை, தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

    Next Story
    ×