என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை
Byமாலை மலர்1 July 2018 9:27 AM GMT (Updated: 1 July 2018 9:27 AM GMT)
ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.
ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம்.
ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும் - இவற்றில் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது - அல்லது உங்களின் படுக்கை அறையில் உள்ள ஒலி - உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்துக்கு அனுப்பும்.
ஜூன் 14-ம் தேதி காப்புரிமை விண்ணப்பம் சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது. இதில் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களின் மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காது. என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஃபேஸ்புக், இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவையில்லாத பட்சத்தில் ஏன் இதற்கான காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன பொது ஆலோசகர் ஆலென் லொ மேஷபிள் தளத்துக்கு அளித்திருக்கும் அறிக்கையில், “சில புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன் பதிவு செய்வது வழக்கமான நடைமுறை தான். இதுபோன்ற காப்புரிமைகள் எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதோடு, இவை மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும்," என தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் தற்சமயம் ஃபேஸ்புக் மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது.
“இந்த தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கின் எவ்வித சாதனங்கள் மற்றும் சேவைகளிலும் இதுவரை சேர்க்கப்படவும் இல்லை, சேர்க்கப்படாது" என ஆலென் லொ தெரிவித்திருக்கிறார்.
புகைப்படம்: நன்றி UNITED STATES PATENT APPLICATION
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X