என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்திய வம்சாவளி வக்கீல்: தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை
Byமாலை மலர்28 Sept 2016 6:45 AM IST (Updated: 28 Sept 2016 6:45 AM IST)
அமெரிக்க வணிக வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல் என தகவல் வெளியான நிலையில் அந்த தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஹூஸ்டன்:
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது பெயர், நாதன் தேசாய் (வயது 46), இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல். அவர் என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பது குறித்து இன்னும் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.
அவரது தந்தை, “எனது மகன் சொந்தமாக சட்ட நிறுவனம் நடத்தி தோல்வி கண்டு அதனால் அதிர்ச்சியில் இருந்தார். வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர் சட்ட நிறுவனத்தை மூடி விட்டார்” என கூறினார். எனவே தொழில் தோல்வி காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா என தெரியவில்லை.
இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரி மார்த்தா மாண்டல்வோ கூறும்போது, “என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நாதன் தேசாய் நடத்தினார் என்பதை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை” என குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது பெயர், நாதன் தேசாய் (வயது 46), இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல். அவர் என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பது குறித்து இன்னும் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.
அவரது தந்தை, “எனது மகன் சொந்தமாக சட்ட நிறுவனம் நடத்தி தோல்வி கண்டு அதனால் அதிர்ச்சியில் இருந்தார். வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர் சட்ட நிறுவனத்தை மூடி விட்டார்” என கூறினார். எனவே தொழில் தோல்வி காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா என தெரியவில்லை.
இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரி மார்த்தா மாண்டல்வோ கூறும்போது, “என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நாதன் தேசாய் நடத்தினார் என்பதை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X