என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றினால் மோசமான விளைவை ஏற்படுத்தும்: பிரான்ஸ்
Byமாலை மலர்15 Jan 2017 7:02 PM IST (Updated: 15 Jan 2017 7:02 PM IST)
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அரசு கருத்து தெரிவித்துள்ளது.
பாரீஸ்:
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தனது பிரச்சாரத்தின் போது இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை புனித நகரான ஜெருசலேமிற்கு மாற்றுவேன் எனக் கூறியிருந்தார். தற்போது அதிபராக பதவியேற்கும் நேரத்திலும் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் மார்க் ஐரால்ட், “டொனால்டு டிரம்ப்பின் இந்த முடிவு மோசமான விளைவுகளை உருவாக்கும். டிரம்பின் இந்த பிடிவாதமான முடிவை அவர் நிறைவேற்ற முடியாது என்பதை தெரிந்துகொள்வார் என நான் நம்புகிறேன்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே ஏற்கனவே உள்ள பிரச்சனையைத் தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள உங்களால், இந்த பிரச்சினையில் பிடிவாதமாக ஒருதலைப்பட்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்றார்.
பாலஸ்தீனிடம் இருந்த ஜெருசலேம் நகரானது 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகர் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு புனித நகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், தனது பிரச்சாரத்தின் போது இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை புனித நகரான ஜெருசலேமிற்கு மாற்றுவேன் எனக் கூறியிருந்தார். தற்போது அதிபராக பதவியேற்கும் நேரத்திலும் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் மார்க் ஐரால்ட், “டொனால்டு டிரம்ப்பின் இந்த முடிவு மோசமான விளைவுகளை உருவாக்கும். டிரம்பின் இந்த பிடிவாதமான முடிவை அவர் நிறைவேற்ற முடியாது என்பதை தெரிந்துகொள்வார் என நான் நம்புகிறேன்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே ஏற்கனவே உள்ள பிரச்சனையைத் தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள உங்களால், இந்த பிரச்சினையில் பிடிவாதமாக ஒருதலைப்பட்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்றார்.
பாலஸ்தீனிடம் இருந்த ஜெருசலேம் நகரானது 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகர் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு புனித நகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X