என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தசைநோயினால் அவதிப்படும் மகன்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் தந்தை
டாக்கா:
வங்காளதேசத்தில் கிராமபகுதியை சேர்ந்தவர் தொபாசல் உசேன். ஏழையான இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது 24 வயது மற்றும் 13 வயது மகன்கள் மற்றும் 8 வயது பேரன் ஆகியோர் ஆபுர்வமான தசை நோயினால் அவதிப்படுகின்றனர்.
அவர்களுக்கு வங்காள தேசம், மற்றும் இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணத்தை செலவழித்து சிகிச்சை அளித்தார். பணம் இல்லாத நிலையில் தனது கடையை விற்று வைத்தியம் பார்த்தார்.
இருந்தும் நோய் குணமாக வில்லை. நோயினால் மகன்களும், பேரனும் அவதிப்படுவதைபார்த்து மன வருத்தத்தில் அவர் நொறுங்கி போனார். அதை தொடர்ந்து நோய் பாதித்துள்ள தனது 2 மகன்கள் மற்றும் பேரனை மருந்து மூலம் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார்.
இதனால் வங்காள தேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் உசேன் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரை பார்த்து சென்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் வங்காள தேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்