search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமெரிக்காவில் மீண்டும் இனவெறி சீக்கிய டாக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல்
    X

    அமெரிக்காவில் மீண்டும் இனவெறி சீக்கிய டாக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல்

    அமெரிக்காவில் சீக்கிய டாக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இண்டியானாவை சேர்ந்தவர் அமன் தீப்சிங். சீக்கியரான இவர் இண்டியானாவில் மோன்ரோயோ ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.

    இவரது செல்போனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு குறுஞ்செய்தி ‘எஸ்.எம்.எஸ்.) வந்தது. அந்த செய்தியை யாரோ அடையாளம் தெரியாத நபர் அனுப்பியிருந்தார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் ஒரு இனவெறி தாக்குதல் என அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமீப காலமாக அமெரிக்காவில் வாழும் இந்திய சீக்கியர்கள் மீது இது போன்ற இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வாஷிங்டன் மாகாணத்தில் வீட்டிற்கு வெளியே 39 வயது சீக்கியர் ஒருவர் மர்ம நபரால் சுடப்பட்டார்.

    Next Story
    ×