என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டென்வர் நகரில் சாப்பிடும் போட்டியில் பங்கேற்றவர் பலி
Byமாலை மலர்6 April 2017 11:26 AM IST (Updated: 6 April 2017 1:12 PM IST)
டென்வர் நகரில் உள்ள ஒரு கடையில் சாப்பாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஒருவரின் தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறி பலியானார்.
டென்வர்:
அமெரிக்காவில் டாக்னட் என்ற உணவு பிரபலமானதாகும். ரொட்டியில் கிரீம்கள் கலந்து செய்யப்படும் இந்த உணவை விற்பதற்காக ஏராளமான பிரத்யேக கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனையை அதிகரிப்பதற்காக அடிக்கடி சாப்பாட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
இவ்வாறு டென்வர் நகரில் உள்ள ஒரு கடையில் சாப்பாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் டிரேவிஸ்மலுப் (வயது 42) என்பவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு டாக்னட் உணவு வழங்கப்பட்டது. அதை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதை போட்டி போட்டு சாப்பிட்டனர்.
டிரேவிஸ்மலுப் சாப்பிட தொடங்கி 80 வினாடியில் அவருக்கு தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிர் இழந்து விட்டார்.
இத்தனைக்கும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பெரிய பரிசுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பரிசாக டாக்னட் உணவு மட்டுமே வழங்குவதாக அறிவித்து இருந்தனர். இந்த உணவுக்கு ஆசைப்பட்டு டிரேவிஸ்மலுப் உயிரை இழந்த பரிதாபம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் டாக்னட் என்ற உணவு பிரபலமானதாகும். ரொட்டியில் கிரீம்கள் கலந்து செய்யப்படும் இந்த உணவை விற்பதற்காக ஏராளமான பிரத்யேக கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனையை அதிகரிப்பதற்காக அடிக்கடி சாப்பாட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
இவ்வாறு டென்வர் நகரில் உள்ள ஒரு கடையில் சாப்பாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் டிரேவிஸ்மலுப் (வயது 42) என்பவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு டாக்னட் உணவு வழங்கப்பட்டது. அதை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதை போட்டி போட்டு சாப்பிட்டனர்.
டிரேவிஸ்மலுப் சாப்பிட தொடங்கி 80 வினாடியில் அவருக்கு தொண்டையில் உணவு சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிர் இழந்து விட்டார்.
இத்தனைக்கும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பெரிய பரிசுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பரிசாக டாக்னட் உணவு மட்டுமே வழங்குவதாக அறிவித்து இருந்தனர். இந்த உணவுக்கு ஆசைப்பட்டு டிரேவிஸ்மலுப் உயிரை இழந்த பரிதாபம் நடந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X