என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜார்ஜியாவில் அழகிப் போட்டி நடந்த கடற்கரை ஓட்டலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்25 Nov 2017 3:47 AM GMT (Updated: 25 Nov 2017 3:47 AM GMT)
ஜார்ஜியாவின் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தன.
பதுமி:
ஜார்ஜியா நாட்டின் கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் ஏராளமான சுற்றுலா ஓட்டல்கள் உள்ளன.
நேற்று நள்ளிரவில் இங்குள்ள லியோகிராண்ட் ஓட்டலின் ஒரு தளத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதால் ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மற்ற தளத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பிலும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டதால் புகையை சுவாசித்த பலர் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் தீக்காயம் அடைந்தும் புகையை சுவாசித்தும் பாதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த ஓட்டலில்தான், ஞாயிற்றுக்கிழமை மிஸ் ஜார்ஜியா அழகிப் போட்டி நடைபெற்றது. அவர்களில் யாரும் ஓட்டலில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்ஜியா அதிபர் ஜியார்ஜி மார்க்வெலாஷ்விலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியா நாட்டின் கருங்கடல் கடற்கரை நகரமான பதுமியில் ஏராளமான சுற்றுலா ஓட்டல்கள் உள்ளன.
நேற்று நள்ளிரவில் இங்குள்ள லியோகிராண்ட் ஓட்டலின் ஒரு தளத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதால் ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மற்ற தளத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பிலும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டதால் புகையை சுவாசித்த பலர் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் தீக்காயம் அடைந்தும் புகையை சுவாசித்தும் பாதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த ஓட்டலில்தான், ஞாயிற்றுக்கிழமை மிஸ் ஜார்ஜியா அழகிப் போட்டி நடைபெற்றது. அவர்களில் யாரும் ஓட்டலில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்ஜியா அதிபர் ஜியார்ஜி மார்க்வெலாஷ்விலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X