search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி
    X

    இந்தோனேசியாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி

    இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா பகுதியில் நேற்று நிகழ்ந்த டிரக் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Indonesiatruckaccident #CentralJava

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவா மாகாணத்துக்கு உட்பட்ட ப்ரிபெஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் சர்க்கரையை எற்றிக்கொண்டு டிரக் ஒன்று ஜகார்த்தா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த அந்த டிரக்கின் பிரேக்கில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு கார், 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 வீடுகள் இந்த விபத்தில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஜாவா பகுதியில் நிகழ்ந்த இதுபோன்ற விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesiatruckaccident #CentralJava
    Next Story
    ×