என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரசித்தி பெற்ற படைப்புகளுக்கு சொந்தக்காரர்: அமெரிக்க எழுத்தாளர் பிலிப் ரோத் காலமானார்
Byமாலை மலர்23 May 2018 7:06 PM GMT (Updated: 23 May 2018 7:06 PM GMT)
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக நியூயார்க் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். #PhilipRoth #RIP
நியூயார்க்:
அமெரிக்க இலக்கிய உலகில் தனக்கென நிலையான இடத்தை பெற்று இருந்தவர், பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் (வயது 85). 1959-ம் ஆண்டில் வெளிவந்த ‘குட்பை கொலம்பஸ்’ என்ற சிறுகதை தொகுப்பே, மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் எழுதிய பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’, அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
அதன் பின்னர் அவர் ஏராளமான சரித்திர நாவல்கள் எழுதினார். குறிப்பாக ‘அமெரிக்கன் பாஸ்டரல்’ என்ற நாவல் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. அத்துடன் புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடைசியில் இதய செயலிழப்பு காரணமாக, நியூயார்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க இலக்கிய உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2011-ம் ஆண்டு, பிலிப் ரோத்துக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் தேசிய மனிதாபிமான பதக்கம் வழங்கி சிறப்பித்தது நினைவுகூரத்தக்கது. #PhilipRoth #RIP
அமெரிக்க இலக்கிய உலகில் தனக்கென நிலையான இடத்தை பெற்று இருந்தவர், பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் (வயது 85). 1959-ம் ஆண்டில் வெளிவந்த ‘குட்பை கொலம்பஸ்’ என்ற சிறுகதை தொகுப்பே, மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் எழுதிய பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’, அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
அதன் பின்னர் அவர் ஏராளமான சரித்திர நாவல்கள் எழுதினார். குறிப்பாக ‘அமெரிக்கன் பாஸ்டரல்’ என்ற நாவல் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. அத்துடன் புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடைசியில் இதய செயலிழப்பு காரணமாக, நியூயார்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க இலக்கிய உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2011-ம் ஆண்டு, பிலிப் ரோத்துக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் தேசிய மனிதாபிமான பதக்கம் வழங்கி சிறப்பித்தது நினைவுகூரத்தக்கது. #PhilipRoth #RIP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X