search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொள்ளையனால் அமெரிக்காவில் சுடப்பட்ட சீக்கிய டிரைவர் பலி
    X

    கொள்ளையனால் அமெரிக்காவில் சுடப்பட்ட சீக்கிய டிரைவர் பலி

    அமெரிக்காவில் கொள்ளையனால் சுடப்பட்ட சீக்கிய டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இதை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் ஒகியோவை சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங் (32). சீக்கியரான இவர் லாரி டிரைவராக இருந்தார்.

    கடந்த 12-ந்தேதி அதாவது 2 வாரத்துக்கு முன்பு பிராடரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்பவன் ஜஸ்பிரீத் சிங்கை துப்பாக்கியால் சுட்டான். இவரிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்க இத்தகைய தாக்குதலை நடத்தினான்.

    இதனால் படுகாயம் அடைந்த அவர் ஒகியோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தற்போது இதை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×