என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலஸ்தீனத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது - அமெரிக்கா அறிவிப்பு
Byமாலை மலர்25 Aug 2018 1:13 AM GMT (Updated: 25 Aug 2018 6:40 AM GMT)
பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. #DonaldTrump
வாஷிங்டன் :
இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.
ஏற்கனவே மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், பொதுமக்களின் உயிர்களுக்கும் பயங்கரவாதிகள் ஆபத்தை விளைவித்து வருவதால் அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவிவருகிறது. இதனால், இப்பகுதியில் தேவையான உதவிகளை செய்வதில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால்,
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை ‘அரசியல் ரீதியிலான மலிவான அச்சுருத்தல்’ என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #DonaldTrump
இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிகழாண்டு பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.
அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், பொதுமக்களின் உயிர்களுக்கும் பயங்கரவாதிகள் ஆபத்தை விளைவித்து வருவதால் அங்கு மிகவும் மோசமான சூழல் நிலவிவருகிறது. இதனால், இப்பகுதியில் தேவையான உதவிகளை செய்வதில் சர்வதேச நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால்,
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை ‘அரசியல் ரீதியிலான மலிவான அச்சுருத்தல்’ என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல என அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. #DonaldTrump
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X