என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமானவரி செலுத்தாத சீன நடிகை கைது
Byமாலை மலர்4 Oct 2018 5:26 AM GMT (Updated: 4 Oct 2018 5:26 AM GMT)
அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்த சீன நடிகையை போலீசார் கைது செய்து வருமான விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PaneBingang
பெய்ஜிங்:
பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார்.
இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது.
இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மவுனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர்.
இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
சீனாவில் வருமான வரி செலுத்தாதவர்கள் இது போன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நடிகை பேன் பிங்பிங் தற்போது தான் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளார். #PaneBingang
பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார்.
இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது.
இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மவுனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர்.
இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
சீனாவில் வருமான வரி செலுத்தாதவர்கள் இது போன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நடிகை பேன் பிங்பிங் தற்போது தான் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளார். #PaneBingang
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X