search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
    X

    தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

    தென் ஆப்பிரிக்காவில் மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்புக்குழுவினர் தீவிர முயற்சி செய்து பாதுகாப்பாக மீட்டனர். #AfricaBabyRescued
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், சாலையோரம் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து அவ்வழியே நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் கேட்டதும், சுற்றியும் தேடியுள்ளர். தொடர்ந்து சத்தம் கேட்கவே அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு அருகில் சென்று பார்த்துள்ளார்.

    அப்போது ஆழத்தில் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை உணர்ந்தார். உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சுத்தி மற்றும் உளி கொண்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிகாலை மெதுவாக தோண்டினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.  மீட்கப்பட்ட குழந்தை டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.



    அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறும்போது, குழந்தையின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை கண்டறிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  #AfricaBabyRescued
    Next Story
    ×