search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்
    X

    பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்

    பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Brazil #Brazilschool #Brazilschoolshooting #SaoPauloschoolshooting
    சாவ் பாலோ:

    பிரேசில் நாட்டு தலைநகரான சாவ் பாலோ நகருக்குள் உள்ள சுஸானோ பகுதியில் பேராசிரியர் ரவுல் பிரேசில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.

    (உள்ளூர் நேரப்படி) இன்று காலை இந்தப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கியவுடன் கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த பள்ளிக்கு போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவர்களும் விரைந்து சென்றனர். இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டதாகவும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. #Brazil #Brazilschool #Brazilschoolshooting #SaoPauloschoolshooting
    Next Story
    ×